Wednesday, February 8, 2017

கீழுயிர்கள்

இழிமக்கள்… கீழுயிர்கள்… செத்துக்குவியட்டும் இவர்கள். ஆண்குறிகொண்டிருப்பதனாலேயே சாகத்தக்கவர்கள்… மீசைகொண்டிருப்பதனாலேயே கீழுலகில் நெளியவேண்டியவர்கள்

- வெண்முரசிலிருந்து




அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருப்பவனே இன்னொரு வீட்டின் ஏழு வயது பெண் குழந்தையை கடத்தி சென்று கொன்று பின் எரித்த செய்தி இன்று காலையில் நண்பர் மூலமாக அறியவந்தது. நண்பரின் பக்கத்து வீட்டு பெண். குழந்தை காணவில்லை என்று அவர் அனுப்பிய செய்தியை வேறொரு குழுமத்திற்கு அனுப்பிய போது அங்கிருந்த நண்பர் இந்த லிங்க்கை அனுப்பி குழந்தை இறந்த செய்தியை குறிப்பிட்டார். அதுவரைக்கும் அந்த குழந்தையை திருப்பி சேர்த்துவிடு ஆண்டவா என்ற வேண்டுதல்,  பயனற்றுப்போய் பலமணிநேரம் ஆகியிருந்தது. யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம். ஹாசினி என்ற பெயரைக்கேட்டால் நேற்றுவரை பொம்மரில்லு படத்தில் வந்த ஜெனிலியா ஞாபகம்தான் வந்தது. இனி இந்த குழந்தை ஞாபகம்தான் வரும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனை தயவு தாட்சணியம் பார்க்காமல் கொன்று தீர்க்கவேண்டும்.




No comments: